Wednesday, March 5, 2014

காதல் முறிவுக்கு பின் இணைந்து நடிக்கும் சிம்பு ஹன்சிகா


சென்னை,
நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் வாலு, வேட்டை மன்னன்  படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும்  நெருக்கம் ஏற்பட்டு இருவருமே  காதலை    பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை. என  அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.
பாண்டிராஜ் இயக்கும் ஒரு  படத்தில்  படத்தில்  சிம்புவும் நயன்தாராவும் இணைந்து  நடிக்கின்றனர்.இதனால் அவர்களது நட்பு மீண்டும் துளிர் விட்டதாகவும் இது ஹன்சிகாவுக்கு பிடிக்க வில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு  பிரிந்துள் ளார்கள்.என்றும் கூறபட்டது.
காதல் முறிவுக்கு பின் சிம்புவும்  ஹன்சிகாவும்  மீண்டும் இணைந்து நடிக் கிறார்கள்.வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள்  பாக்கி உள்ளன.   இதை விரைவில் படமாக்க  திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment