சேவக் ‘சூப்பர்’ சதம்: பைனலில் பஞ்சாப் அணி
மும்பை: சேவக் விஸ்வரூபம் எடுத்தால் எந்த பவுலரும்
தாக்குப்பிடிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமானது. இவரது அதிரடி சதம்
கைகொடுக்க, ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பஞ்சாப் அணி முதன்முறையாக
முன்னேறியது. நேற்று நடந்த ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச் சுற்றில்,
சொதப்பிய சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து,
வெளியேறியது. சென்னை தரப்பில் ரெய்னாவின் அதிவேக அரைசதம் வீணானது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சேவக் அபாரம்:
பஞ்சாப் அணிக்கு சேவக், மனன் வோரா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ‘பழைய’ சேவக்காக எழுச்சி கண்ட இவர், ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த இவர், நெஹ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது வோரா (34) வெளியேறினார். மேக்ஸ்வெல் (13) ஏமாற்றினார். அசத்தலாக ஆடிய சேவக், 50வது பந்தில் தனது 2வது ஐ.பி.எல்., சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சேவக், 58 பந்தில் 122 ரன்கள் (8 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) போல்டானார். மில்லர் (38) ‘ரன்–அவுட்’ ஆனார். விரிதிமன் சகா (6) சொதப்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
ரெய்னா விளாசல்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (0) முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஜான்சன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். பின், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (7) போல்டானார்.
மெக்கலம் ஏமாற்றம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா, பர்விந்தர் அவானா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 33 ரன்கள் ரன்கள் எடுக்க, சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதையடுத்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
திருப்புமுனை:
இந்த நேரத்தில் ஜார்ஜ் பெய்லியின் துல்லிய ‘த்ரோவில்’ ரெய்னா (87 ரன், 25 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி) துரதிருஷ்டவசமாக ‘ரன்–அவுட்’ ஆக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய பிரண்டன் மெக்கலம் (11) 2வது ரன்னுக்கு ஓடிய போது ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார்.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய அவானா, ரவிந்திர ஜடேஜா (27), டேவிட் ஹசி (1) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். அஷ்வின் (10) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனி நிதானமாக ஆடினார். இவர், அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் பர்விந்தர் அவானா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எல்லாமே ஒன்று
பஞ்சாப் அணி 11வது ஓவரின் முடிவில், 1 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது (111/1, 11 ஓவர்) சற்று வித்தியாசமாக இருந்தது.
இரண்டாவது சதம்
நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சேவக் (122 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக 2011ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*), பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.
* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 30வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.
நான்காவது முறை
நேற்று 226 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதில் மூன்று முறை சென்னைக்கு (231, 226, 206 ரன்கள்) எதிராகவும், ஒரு முறை (211) ஐதராபாத்துக்கு எதிராகவும் இம்மைல்கல்லை எட்டியது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் அணி உள்ளது.
அதிவேக அரைசதம்
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்தில் அரைசதத்தை பதிவு செய்த கோல்கட்டா அணியின் யூசுப் பதான், முதலிடத்தில் உள்ளார்.
‘ஹாட்ரிக்’ தோல்வி
இம்முறை சென்னை அணியால் பஞ்சாப்பை வீழ்த்த முடியவில்லை. லீக் சுற்றில் இரண்டு முறை தோற்றது. நேற்றும் சொதப்பி மூன்றாவது தோல்வியை பெற்றது.
ரெய்னா ‘ரன்–அவுட்’
நேற்றைய போட்டியில், ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது ரெய்னா, 25 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்தார். கரண்வீர் சிங் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை தட்டிவிட்ட பிரண்டன் மெக்கலம், தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். துல்லியமாக பீல்டிங் செய்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, பந்தை சுரேஷ் ரெய்னா ஓடிய திசையில் இருந்த ‘ஸ்டெம்பை’ நோக்கி எறிந்து ‘ரன்–அவுட்’ செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. பின் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்றது
விமர்சனத்துக்கு பதிலடி:
சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘ சில போட்டியில், குறைவான ரன்களில் அவுட்டாகி ‘பெவிலியனுக்கு’ திரும்பியபோது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள் நான் சரியாக விளையாடவில்லை என அவனை கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது. பொறுத்திருங்கள் என அவருக்கு பதில் தெரிவித்தேன். தவிர, பஞ்சாப் அணிக்கு என்னால் ஒரு போட்டியிலாவது வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். கவனத்துடன் விளையாடி, சதமும் பதிவு செய்தேன்,’’ என்றார்.
இரண்டாவது இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் அடித்த சேவக், ஐ.பி.எல்., தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், முரளி விஜய் இந்த சாதனையை பெற்றிருந்தார்.
கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்
நேற்று சென்னை அணியின் டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11), டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இந்திய வீரரான சேவக் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தோனி செய்த தவறு
முக்கியமான போட்டியில் ‘டாஸ்’ வென்ற தோனி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்ய தவறினார். பிரதான பவுலர்களை சேவக், வெளுத்து வாங்கிய நிலையில் ரெய்னா, டுபிளசி, டுவைன் ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.
‘பாலிவுட்’ பைனல்
நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது.

வெளியேறியது. சென்னை தரப்பில் ரெய்னாவின் அதிவேக அரைசதம் வீணானது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான ‘பிளே–ஆப்’ சுற்றின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
சேவக் அபாரம்:
பஞ்சாப் அணிக்கு சேவக், மனன் வோரா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ‘பழைய’ சேவக்காக எழுச்சி கண்ட இவர், ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த இவர், நெஹ்ரா ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது வோரா (34) வெளியேறினார். மேக்ஸ்வெல் (13) ஏமாற்றினார். அசத்தலாக ஆடிய சேவக், 50வது பந்தில் தனது 2வது ஐ.பி.எல்., சதத்தை பதிவு செய்தார். ஜடேஜா வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சேவக், 58 பந்தில் 122 ரன்கள் (8 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (1) போல்டானார். மில்லர் (38) ‘ரன்–அவுட்’ ஆனார். விரிதிமன் சகா (6) சொதப்பினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜான்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
ரெய்னா விளாசல்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (0) முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஜான்சன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். பின், சந்தீப் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா, 16 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஸ்மித் (7) போல்டானார்.
மெக்கலம் ஏமாற்றம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா, பர்விந்தர் அவானா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 33 ரன்கள் ரன்கள் எடுக்க, சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இதையடுத்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.
திருப்புமுனை:
இந்த நேரத்தில் ஜார்ஜ் பெய்லியின் துல்லிய ‘த்ரோவில்’ ரெய்னா (87 ரன், 25 பந்து, 6 சிக்சர், 12 பவுண்டரி) துரதிருஷ்டவசமாக ‘ரன்–அவுட்’ ஆக, போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய பிரண்டன் மெக்கலம் (11) 2வது ரன்னுக்கு ஓடிய போது ‘ரன்–அவுட்’ செய்யப்பட்டார்.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய அவானா, ரவிந்திர ஜடேஜா (27), டேவிட் ஹசி (1) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ கொடுத்தார். அஷ்வின் (10) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனி நிதானமாக ஆடினார். இவர், அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி (42), மோகித் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் பர்விந்தர் அவானா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எல்லாமே ஒன்று
பஞ்சாப் அணி 11வது ஓவரின் முடிவில், 1 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது (111/1, 11 ஓவர்) சற்று வித்தியாசமாக இருந்தது.
இரண்டாவது சதம்
நேற்று அபாரமாக ஆடிய பஞ்சாப் அணியின் சேவக் (122 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக 2011ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக 119 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் ஆகியோருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
* இது, இம்முறை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது சதம். முன்னதாக மும்பை அணியின் லெண்டில் சிம்மன்ஸ் (100*), பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார்.
* தவிர இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 30வது சதம். இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.
நான்காவது முறை
நேற்று 226 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதில் மூன்று முறை சென்னைக்கு (231, 226, 206 ரன்கள்) எதிராகவும், ஒரு முறை (211) ஐதராபாத்துக்கு எதிராகவும் இம்மைல்கல்லை எட்டியது. இதன்மூலம் இம்முறை அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் அணி உள்ளது.
அதிவேக அரைசதம்
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 16 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்தில் அரைசதத்தை பதிவு செய்த கோல்கட்டா அணியின் யூசுப் பதான், முதலிடத்தில் உள்ளார்.
‘ஹாட்ரிக்’ தோல்வி
இம்முறை சென்னை அணியால் பஞ்சாப்பை வீழ்த்த முடியவில்லை. லீக் சுற்றில் இரண்டு முறை தோற்றது. நேற்றும் சொதப்பி மூன்றாவது தோல்வியை பெற்றது.
ரெய்னா ‘ரன்–அவுட்’
நேற்றைய போட்டியில், ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவரில் 100 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது ரெய்னா, 25 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்தார். கரண்வீர் சிங் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை தட்டிவிட்ட பிரண்டன் மெக்கலம், தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். துல்லியமாக பீல்டிங் செய்த கேப்டன் ஜார்ஜ் பெய்லி, பந்தை சுரேஷ் ரெய்னா ஓடிய திசையில் இருந்த ‘ஸ்டெம்பை’ நோக்கி எறிந்து ‘ரன்–அவுட்’ செய்தார். இது, போட்டியில் திருப்பமாக அமைந்தது. பின் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெற்றது
விமர்சனத்துக்கு பதிலடி:
சதம் அடித்தது குறித்து பஞ்சாப் அணியின் சேவக் கூறுகையில்,‘‘ சில போட்டியில், குறைவான ரன்களில் அவுட்டாகி ‘பெவிலியனுக்கு’ திரும்பியபோது, என் மனைவி போனில் தொடர்பு கொண்டார். எனது மகனின் நண்பர்கள் நான் சரியாக விளையாடவில்லை என அவனை கேலி செய்வதாக கூறினார். அப்போது, இன்னும் சில போட்டி உள்ளது. பொறுத்திருங்கள் என அவருக்கு பதில் தெரிவித்தேன். தவிர, பஞ்சாப் அணிக்கு என்னால் ஒரு போட்டியிலாவது வெற்றி கிடைக்க வேண்டும் என விரும்பினேன். கவனத்துடன் விளையாடி, சதமும் பதிவு செய்தேன்,’’ என்றார்.
இரண்டாவது இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் அடித்த சேவக், ஐ.பி.எல்., தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், முரளி விஜய் இந்த சாதனையை பெற்றிருந்தார்.
கைவிட்ட வெளிநாட்டு வீரர்கள்
நேற்று சென்னை அணியின் டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11), டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றினர். அதேவேளையில் பஞ்சாப் அணிக்கு இந்திய வீரரான சேவக் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
தோனி செய்த தவறு
முக்கியமான போட்டியில் ‘டாஸ்’ வென்ற தோனி, முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்ய தவறினார். பிரதான பவுலர்களை சேவக், வெளுத்து வாங்கிய நிலையில் ரெய்னா, டுபிளசி, டுவைன் ஸ்மித் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாமல் ஏமாற்றம் அளித்தார்.
‘பாலிவுட்’ பைனல்
நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா அணி, நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியை எதிர் கொள்கிறது.

