Monday, May 12, 2014

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி

துபாயில் விபத்து : 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாப பலி


துபாய்: துபாயில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது வேகமாக வந்த பஸ் மோதியதில் 10 இந்தியர்கள் உட்பட 15 பேர் உடல் நசுங்கி இறந்தனர். துபாயில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 27 ஊழியர்கள் ஒரு மினி பஸ்சில் நேற்று முன்தினம் ஏறி ஜெபெல் அலி பகுதியில் உள்ள இடத்துக்கு வேலை பார்க்க சென்றனர். அந்த பஸ் எமிரேட்ஸ் சாலை வழியாக சென்ற போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் அந்த பஸ் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் தகடுகள் வெட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.  பஸ்சுக்குள் சிக்கி இறந்துகிடந்த 15 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களில் 10 பேர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  5 பேர் வங்க தேசத்தை சேர் ந்தவர்கள். பஸ்சுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர் களை அருகில் உள்ள மரு
த்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment